கல்முனை சாஹிரா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஹேண்ட்போல் போட்டி; தெஹியத்தகண்டி அணி சாம்பியன்!

கல்முனை சாஹிரா கல்லூரி தேசிய பாடசாலை மைதானத்தில் நேற்று (11) திகதி நடைபெற்ற அம்பாறை மாவட்ட மட்டத்திலான ஹேண்ட்போல் (Handball) போட்டிகளில், தெஹியத்த கண்டி பிரதேச செயலக அணி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான என இரண்டு பிரிவுகளிலும் வெற்றி பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது.
www.iconicmediasl.com
Asmath raseem

மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.பி.எம். விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது இப்போட்டியில்ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் சாய்ந்தமருது பிரதேச செயலக அணியை எதிர்த்து தெஹியத்த கண்டி அணி மோதி வெற்றி பெற்றது.அதேபோல், பெண்களுக்கான இறுதிப் போட்டியில் காரைதீவு பிரதேச செயலக அணியை எதிர்கொண்ட தெஹியத்த கண்டி அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி வாகை சூடியது.வெற்றி பெற்ற தெஹியத்த கண்டி பிரதேச செயலக விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும், பயிற்றுவிப்பாளர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்!